(செ.தேன்மொழி)
தெஹிவளை பகுதியில் கனடாவில் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு போலி ஆவணங்களை தயாரித்து 17 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் பெணணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைதய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மொரட்டுவ - ஹங்குலான பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 30 வெளிநாட்டு பயணச்சீட்டுகள், 35 போலி ஆவணங்கள், கணனி மற்றும் அச்சியந்திரம் இரண்டு , போலி இறப்பர் முத்திரை மற்றும் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் மோசடி தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM