மீன் பிடி அமைச்சருக்கு தெரியாமல், யாழ் மாவட்டத்தில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கு இரண்டு நபர்களுக்கு மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் பருத்தித்துறை முனை பகுதியில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே இக் கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் மீன்பிடி அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில்களுக்கு அனுமதி வழங்க படுவதில்லை என தீர்மானிக்க பட்டிருந்த போதும் அதனையும் மீறி மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் இரண்டு நபர்களுக்கு கடல்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை சுருக்குவலை தொழில் பீஞ்ச் பாவித்து கரவலை தொழிலிலிலஸ ஈடுபடுவதையும் நிறுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனவும் அவர்களால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது.
இது தொடர்பில் பதிலளித்த மீன்பிடி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தான் இவற்றை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பிரதிநிதிகள், வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என சுமார் இருபது பேர்வரை கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM