ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
2020 அரிமஹ அமைப்பு ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம் பெயார் வ்ஸ்ட் காப்புறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது. இக்காப்புறுதி முறையின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக வருடத்தில் 985 ரூபா செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு மில்லின் ரூபா பெறுமதியான காப்புறுதி கிடைக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கட்டிருப்பதாக 2020 அரிமஹ அமைப்பின் தலைவர் கனிஸ்க டி சில்வா இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.
இதில் உரையாற்றிய ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்க தலைவரும் ஊடகவியலாளருமான உபுல் ஜனக ஜயசிங்க பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இதனை வெற்றிகொள்ள தமது சங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
077 3945325 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM