மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு : 20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு : 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை அணியானது முழுமையாக கைப்பற்றி மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியை வைட் வோஷ் செய்திருந்தது.
இதன் பின்னர் ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
இந் நிலையில் தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 15 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 09 ஓட்டங்களையும், செஹான் ஜயசூரிய 16 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 11 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 23 ஓட்டங்களையும், வர்னிந்து ஹசரங்க 08 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, தசூன் சானக்க 31 ஓட்டங்களுடனும், திசர பெரேரா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பேபியன் அலன் 02 விக்கெட்டுக்களையும், ஷெல்டன் கோர்ட்ரல், உசேன் தோமஷ் மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM