(ஆர்.யசி)
பலமான சமூக கட்டமைப்பு ஒன்றினையும், உறுதியான பொருளாதார கொள்கையொன்றை உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்ப தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பயணிக்கும் கொள்கையை வகுக்க தயாராக இருப்பதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பலமான எதிர்க்கட்சியாக உருவாக்க மக்களின் ஆதரவை கேற்பதாகவும் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனைக் கூறினார்.
இம்முறை தேர்தலில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடும். இந்த தேர்தலில் எமக்கு இலக்கும் நோக்கமும் உள்ளது. இந்த ஆட்சியும் இதற்கு முன்னர் முன்னெடுத்த ஆட்சியும் தம்மால் நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என்பதை நிருபித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்கு முன்னரும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தனர். எனினும் இந்த காலத்தில் இந்த நாட்டின் பொருளாதார கொள்கையும், மக்களின் சமூக தன்மைக்கும் அமைய இனியும் இந்த ஆட்சியாளர்களுடன் முன்னோக்கி செல்ல முடியாது என்பது தெரிந்து விட்டது.
ஆகவே இந்த நாட்டின் ஆரோக்கியமான சமூகமொன்றையும், பலமான பொருளாதார கொள்கையையும் புதிய சமூக கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது குறித்து தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க நாம் தயாராக உள்ளோம்.
அதேபோல் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. அதற்கான பலமான அணியொன்றை எமக்கு வழங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM