(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒருபோதும் இணைந்துக் கொள்ளமாட்டார் எனத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கே முழுமையான ஆதரவினை இறுதியில் வழங்குவார் என்றும் கூறினார்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசுவாசமானவர். அவர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையினை பெறவுமில்லை, அதற்கு ஆதரவாக செயற்படவுமில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே அவர் இன்றும் உள்ளார். இந்த தீர்மானம் அவரது அரசியல் கொள்கையினை வெளிப்படுத்தியுள்ளது.
பொதுதேர்தலில் அவர் யாருக்கு ஆதரவாக செயற்படுவார். என்பது குறித்து உரிய கவனம் செலுத்தி வருகின்றோம். அவர் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துக் கொண்டதன் பின்னரும் அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைப்பது. கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM