பிவிதுறு ஹெல உருமயவின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் எழுதிய “ மஹிந்த சுலங்கின் கோடாபிஷேகயட” நூல் வெளியீட்டு விழா நேற்று பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 2015 ஜனவரி 8 இல் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தை மாற்றி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் வரையிலான பயணம் “ மஹிந்த சுலங்கின் கோடாபிஷேகயட” நூலின் உள்ளடக்கமாகும்.
நூல் மகாசங்கத்தினருக்கு கையளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாநாயக்கார ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டன.
கலாநிதி புஞ்சி நிலமே மீகஸ்வத்த நூல் பற்றிய அறிமுகத்தை முன்வைத்தார்.
அமைச்சர்களான வாசுதேவ நாநாயக்கார மற்றும் விமல் வீரவங்ச தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
நாராஹேன்பிட அபயராமையின் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆநந்த தேரர், மகாசங்கத்தினர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM