கொரோனா வைரஸினால் நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 30 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதனால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,042 ஆக உயர்வடைந்துள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் வியாழக்கிழமை மாத்திரம் 143 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 126 பேர் கொரோனாவின் பிரதான மையப் பகுதியான ஹூபேயில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 80,552 ஆக பதிவாகியுள்ளது.
அது மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 97,852 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 53,726 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.
இதேவளை சீனாவுக்கு வெளியே இதுவரை 341 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 3,383 ஆக காணப்படுகிறது.
சீனாவுக்கு வெளியே ஏற்பட்ட உயிரிழப்புகள்
- இத்தாலி: 148
- ஈரான்: 107
- தென்கொரியா: 42
- ஜப்பான்: 12
- அமெரிக்கா: 12
- பிரான்ஸ்: 07
- ஸ்பெய்ன்: 03
- ஹொங்கொங்: 02
- ஈராக்: 02
- தாய்வான்: 01
- அவுஸ்திரேலியா: 01
- தாய்லாந்து: 01
- பிலிப்பைன்ஸ்: 01
- சுவிட்சர்லாந்து: 01
- பிரிட்டன்: 01
Photo Credit :CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM