பதுளை ஊடகவியலாளரொருவரின் வீடுடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் (05-03-2020) இன்று புகார் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் தமது குடும்ப சகிதம் திருமண நிகழ்வொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு நிறைவுற்று இரவு குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்தவர்கள் அலுமாரியை உடைத்திருப்பதைக் கண்டு அலுமாரியை சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் காணாது பதற்றமடைந்தனர். .
இதையடுத்து அவர்கள் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நகைகளின் பெறுமதி ஒன்றரை இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டிருப்பதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருட்டு குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பதுளைப் பொலிசார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM