சுரேன் ராகவனுக்கு எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனத்தை வழங்குவது - சிவஞானம்

Published By: Daya

05 Mar, 2020 | 12:23 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு சாட்சியம் சொல்வதற்குச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிட நாம் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனத்தை வழங்குவது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைய நாட்களில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.அந்த காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் சென்று அங்கே தமிழர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்வதற்கு சென்றிருந்தநபர். அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

நாம் எவ்வாறு தான் அவருக்கு அதை வழங்க முடியும். எனவே இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது அவருக்கு ஆசனம் வழங்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதனைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை என்று கூற முடியாது ஆனால் தவறான போலிப் பிரச்சாரங்கள் செய்ய முடியாதே தவிர அனைவருக்கும் அவர்கள் தொடர்பில் கதைக்க முடியும் எனவே அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோர் அவதானமாக தமது கருத்துக்களை வெளியிடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59