வவுனியாவில் வாளுடன் கைதான இருவர் வழங்கிய தகவலில் மேலும் மூவர் கைது

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 05:00 PM
image

வவுனியாவில் நேற்று வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விஷேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின்போது வேப்பங்குளம் பகுதியில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இன்று (04.03) ஒரு வாளுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் நேற்று மாலை 4மணியளவில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதி ரோந்து நடவடிக்கையின்போது வாளுடன் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப்படையினர் கையளித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர்கள் வழங்கிய தகவலினடிப்படையில் இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு வாள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் இரண்டு வாளுடன் ஜந்து இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08