முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி, கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சம்பிக ரணவக்கவுக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதிர்வரும் ஏப்ரல் 26 முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு சந்தீப் என்ற இளைஞன் விபத்துக்குள்ளான விவகாரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறைத்து சாட்சியங்களை சோடித்து நீதித்துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் செல்ல கடந்த டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.
25 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் , 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளிலும் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணித் தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM