மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந் திரனின் பதவி நீடிப்பு தொடர்பில் நிதி அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுப்பாரென அரச தொழில் முயற்சி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.
குறித்த பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை மத்திய வங்கி ஆளுநர்
அர்ஜுன மகேந்திரன் இன்னும் அரசாங்கத்திற்கு அறிவிக்க வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி ஆளுனர் விவகாரம் குறித்து இன்று பெரிதும் கருத்துக்கள் வெளியாகின்றன. இது புது விடயமல்ல. ஒரு வருடகாலமாக இது தொடர்பில் பேசப்படுகின்றது.எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானம் எடுப்பார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவர் நீக்கப்படுவாரா இல்லையா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது. அவரின் பொருளாதார அபிவிருத்தித்கான பங்களிப்பு மற்றும் மத்திய வங்கியை நிர்வகித்த முறைமை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுப்பார்.
இவ்வாறிருக்கையில் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகளில் இருக்கின்றவர்கள் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி ,சுதந்திர கட்சி என்று வேறுபட்ட கருத்துக்ளை வெளியிடுவது கவலைக்குரிய காரணியாகும். அத்துடன் மத்திய வங்கு ஆளுனர் கோப் குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் எம்.பி.யும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
குழுவின் தலைவர் என்ற வகையில் விசாரணைக்கு ஓத்துழைப்பு வழங்காதவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பூரண அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய அமைச்சு பதவிகள்
புதிய அமைச்சு பதவிகளை வழங்கி நாம் எவரையும் வறவேற்கவில்லை. அவ்வாறு வருபவர்களுக்கு அமைச்சு பதவி வழங்க நாம் நினைத்திருந்தால் தேசிய அரசாங்கத்தை விடுத்து தனியாக ஆட்சி அமைத்திருக்க முடியும். நபர்களை விலை கொடுத்த வாங்கிஅரசாங்கம் அமைக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமிருக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM