சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பித்துள்ளமையால் தொடர் விடுமுறை காலங்களில் யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இவ்வாறு செல்லும் யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லத்தண்ணி பாதையையும் தியகல சந்தியூடான நோட்டன் நல்லத்தண்ணி பாதையையும் பாவித்து வருகின்றனர்.
இவ்வாறு தொடர் விடுமுறை காலங்களில் நோட்டன் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக வாகன சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இப்பாதையில் ஒரு சில பகுதிகளில் அகலம் குறைவாக இருப்பதால் சிவனொளிபாதமலைக்கு வரும் வாகனமும் வந்து விட்டு திரும்பி செல்லும் வாகனமும் அப்பகுதிகளில் ஒரே சந்தர்ப்பங்களில் செல்ல முடியாது வாகன நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
மேலும், இவ்வாறான பகுதிகள் குறித்து இப்பகுதி வாகன சாரதிகள் அறிந்திருந்தாலும் வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் யாத்திரிகர்கள் இவ்வாறான குறுகிய பாதை பற்றி அறியாமையால் இவ்வாறான வாகன நெரிசல் ஏற்படுவதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் இப்பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியிருப்பதாகவும் இதனை துரித கதியில் முன்னெடுத்து பணிகளை நிறைவு செய்ய உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM