பதுளை ஹாலி-எலை பிரதேச செயலகத்திற்கு முன்னாளுள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து நபரொருவரின் சடலத்தை ஹாலி-எலைப் பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.
ஹாலி-எலைப் பகுதியின் செரண்டிப் தோட்டப் பிரிவைச் சேர்ந்த டி. பவானந்தன் என்ற 32 வயதுடையவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஹாலி-எலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நபர் கொழும்பு தனியார் பாதுகாப்பு சேவைப் பிரிவில் சேவையாற்றி வந்தவரென்றும் இவர் அதிகாலை கொழும்பிலிருந்து பதுளை செல்லும் பஸ்ஸில் சென்று ஹாலி-எலையில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மரணத்திற்குக் காரணம் தெரியவில்லையென்றும், மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட சடலத்தின் சட்டைப் பைக்குள்ளிருந்த தேசிய அடையாள அட்டை மற்றும் தனியார் பாதுகாப்பு சேவை அடையாள அட்டை உள்ளிட்ட பஸ் டிக்கட் ஆகியனவற்றை பொலிசார் சடலத்துடன் மீட்டுள்ளனர்.
இம்மரணம் எவ்வகையில் ஏற்பட்டதென்பது குறித்து அறியச் சடலம் ஹாலி-எலை பிரதேச அரசினர் வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM