வெள்ளிக்கிழமைக்கு முன்னர் யோசனைகளை வழங்குங்கள் : - பொது மக்களிடம் கோரிக்கை

Published By: MD.Lucias

18 Jun, 2016 | 08:58 AM
image

பொறுப்புக் கூறலை உறுதிபடுத்தும் பொருட்டு , உண்மைகளை கண்டறிவதற்காக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி பொது மக்களிடமிருந்து யோசனைகளை  பெற்றுக் கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. 

  சமர்ப்பித்தல்களை  பொது மக்களினால் தனியாகவோ குழுவாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ சமர்பிக்க முடியும். இரகசியங்கள் பேணப்பட வேண்டுமாயின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி அதற்கான உறுதிமொழியை வழங்கும் என்று  செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி  கடந்த ஜனவரி மாதம் பிரதமரினால் ஸ்தாபிக்கப்பட்டது. உண்மைகளை கண்டறிந்து நீதியை நிலை நாட்டல் , மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் , நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஸ்தாபிக்க பொது மக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்வதே செயலணியின் பணியாகும்.

இவற்றை மையப்படுத்தி , காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் , உண்மை, நீதி , நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு உள்ளிட்ட விஷேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதி பொறிமுறையை ஏற்கனவே செயலணி ஸ்தாபித்துள்ளது. 

இந்நிலையில் ,  சமர்ப்பித்தல்களுக்கான இறுதி திகதி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வழங்கப்பட்ட காலநீடிப்பின் பிரகாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

இந்த சமர்ப்பணங்களை ctf.srilanka@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அல்லது  கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து , செயலாளர் ,நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ,  நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசு கட்டிடம் , இலக்கம் - 01 , சேர்.பரோன் ஜயதிலக மாவத்தை , கொழும்பு - 01 என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58