யாழ்.மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இம்மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஒரு வாரம் முழுவதும் பிராந்திய சுகாதார வைத்தய அதிகாரியின் கீழ் நடைபெறவுள்ளது.
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் நடைபெறுவதுடன் கரைநகர் ஊர்காவற்றுறை மருதங்கேணி தவிர்ந்த ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்து நாட்களும் நடைபெறவுள்ளது.
13 ஆம்திகதி பாடசாலைகளிலும் மற்றும் பாடசாலைச் சூழல்களில் நுளம்புக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளும் நீர் தேங்கி நிற்கும் நிலைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய நாட்களில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் இத்தகைய பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. 15 ஆம் திகதி அனைத்து இடங்களிலும் சிரமதான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இத்தகைய நிகழ்வுகளுக்காக மாநகர சபைப் பகுதியில் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுச்சுகாதார பரிசோதகர் முப்படையினர் பொலிஸார் , கிராம அலுவலர் அனைவரது ஒத்துழைப்புக்களுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
இதற்காக அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் பிரதேச சபை தவிசாளர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM