தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரும் அதரடித் துடுப்பாட்டக்காரருமான ஏ.பி.டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பும் வாய்ப்புள்ளது.
இந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க டி வில்லியர்ஸை தயாராகுமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அண்மைய இருபதுக்கு : 20 அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர் இம்ரான் தாஹிர் மற்றும் கிறிஸ் மோரிஸுடன் சேர்ந்து வரவிருக்கும் இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத்துக்காக தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம்பெற விரும்பினால் தங்களை தயாராக வைத்திருக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
35 வயதான ஏ.பி.டி.வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 2018 மே 23 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இருப்பினும், அவர் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் 2019 ஆம் ஆண்டு மீண்டும் பங்கேற்க முயன்றார், ஆனால் நிர்வாகத்துடன் ஒரு உடன்பாட்டை பெற முடியவில்லை.
2020 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 முதல் நம்பவம் மாதம் 15 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo Credit : Twitter
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM