வெளிநாட்டு தம்பதியினரை அச்சுறுத்திய விவகாரம் : விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

Published By: Vishnu

04 Mar, 2020 | 10:43 AM
image

இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியை பார்க்க சென்ற வெளிநாட்டு தம்பதியினர் இலங்கை அணிக் கொடியுடன் இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அவர்களிடம் சென்ற ரசிகர் ஒருவர் குறித்த வெளிநாட்டுப் பெண், மேனியில் போர்த்தியிருந்த தேசியக் கொடியை அகற்றுமாறு அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந் நிலையில் இந்த சம்பவத்தை காணொளி மூலம் பதிவுசெய்த நபர் ஒருவர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

இந்த காணொளி தற்போது வைரலாகி வருவதுடன், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டணத்தை தெரிவித்ததுடன், வெளிநாட்டு தம்பதியினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

இந் நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். 

அதற்கமைவாக தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51