கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை 3,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இறுதிக்குள் 38 பேர் உயிரிழந்துள்ளமையினால், சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இதேவளை நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்கள்ளான 119 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் 115 பேர் ஹூபேயைச் சேர்ந்தவர்கள்.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் இதுவரை 80,270 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49,856 நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியும் உள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளுக்கு வெளியே இதுவரை 219 உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது :
- இத்தாலி: 79
- ஈரான்: 77
- தென்கொரியா: 32
- ஜப்பான்: 12
- அமெரிக்கா: 09
- பிரான்ஸ்: 04
- ஹொங்கொங்: 02
- தாய்வான்: 1
- அவுஸ்திரேலியா: 1
- தாய்லாந்து: 1
- பிலிப்பைன்ஸ்: 1
Photo Credit: CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM