தற்போதைய இலங்கையின் ஜனாபதியாக பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் பின்னர் அவருக்கெதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்கிரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக்கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதில்லையென அஹிம்சா மேலும் தெரிவித்தார்.
லசந்த விக்கிரம கொலை தொடர்பில் இதுவரை இலங்கை அரசு ஏற்கவோ அல்லது மறுதலிக்கவோ இல்லையென இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமென் செயுங் தெரிவித்தார்.
அஹிம்சா விக்கிரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM