முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த மீன் விற்பனையில் ஈடுபடும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் சிலாபம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது வீதியில் மீன் விற்பனைக்காக குறித்த வயோதிபர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ௯றப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தல் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM