முன்னாள் நீதிவான் திலின கமகே : தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டது.!

Published By: Robert

17 Jun, 2016 | 03:00 PM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை தெளிவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திரும்ப பெறப்பட்டுள்ளது.  

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு நுகேகொடை நீதிமன்றம் கடந்த வாரம் பிணை வழங்கியது. 

குறித்த பிணை உத்தரவு சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த பிணை உத்தரவை தற்காலிகமாக தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பித்தது. 

இந்நிலையில் குறித்த மனு திரும்ப பெறப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் திலின கமகேவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46