பெண் எம்.பி. சுட்டு கொலை : பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்

17 Jun, 2016 | 02:18 PM
image

பிரித்தானியாவில் பெண் எம்.பி. ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் 41 வயதுடைய ஜோ காக்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தையடுத்து   ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரசாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமா - வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கான மக்களிடம் பொது வாக்கெடுப்பு, எதிர்வரும் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பிரித்தானியாவில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துவந்த தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (வயது 41) பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். 

ஒரு பெண் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. 

பிரித்தானியா முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவி உள்ளநிலையில் வாக்கெடுப்பு பிரச்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜோ காக்ஸ் தனது மேற்கு யாக்ஷைரில், பிரிஸ்டோல் நகரில்  பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலை ஜோ காக்ஸ் விலக்க முயன்ற போதே மேற்படி விபரீதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை பொலிஸார் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 52 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர் கருத்து தெரிவிக்கையில், “குற்றவாளி ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கத்தியால் தாக்கினார்,” 

இதற்கிடையே பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தன்னுடைய பிரசார நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ளார். இதுபோன்று பிறதலைவர்களும், மக்களும் ஜோ காக்ஸ் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52