நீங்கள் இந்திய அணியின் தலைவர் என்ற வகையில் முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும் என கருதுகின்றீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை விராட்கோலி அந்த செய்தியாளரிடம் சீறிப்பாய்ந்த சம்பவம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விராட்கோலி மீண்டும் சீற்றமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் கேன் வில்லியம்சன் , லதாம் ஆட்டமிழந்த வேளை விராட்கோலி நடந்துகொண்ட விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையிலேயே அவரை நோக்கி இந்த கேள்வியை பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.
இந்த கேள்வியினால் சீற்றமடைந்த விராட்கோலி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் எனக்கு பதிலை சொல்லுங்கள் என பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு உரிய கேள்வியை முன்வைக்கவேண்டும் என விராட் தெரிவித்துள்ளார்.
நான் மூன்றாவது நடுவருடன் பேசியுள்ளேன், அவரிற்கு தெளிவுபடுத்தியுள்ளேன் நீங்கள் இங்கு அரை குறை அறிவுடன் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் - நீங்கள் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்- வில்லியம்சனை நோக்கி சைகை செய்தது, இரசிகர்களை நோக்கி சைகை செய்தது, இந்திய அணித்தலைவர் என்ற முறையில் நீங்கள் முன்னுதாரணமாக நடந்து கொள்ளவேண்டாமா ?
விராட்கோலி- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்
பத்திரிகையாளர்-நான்தான் உங்களை கேள்வி கேட்டேன்
விராட்- நான் உங்களை கேள்வி கேட்கின்றேன்
பத்திரிகையாளர் - நீங்கள் முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும்
விராட்கோலி-
என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு உரிய கேள்வியை முன்வைக்கவேண்டும்
நான் மூன்றாவது நடுவருடன் பேசியுள்ளேன், அவருக்கு நேற்று இடம்பெற்ற விடயங்கள் குறித்து பிரச்சினை எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இங்கு விடயங்களை அரைகுறையாக அறிந்துகொண்டு கேள்விகளை முன்வைக்க முடியாது.
நீங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்த முயன்றால் இது அதற்கான இடமல்ல
இதேவேளை இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள விராட்கோலி இந்திய பந்து வீச்சாளர்கள் அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திய பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் அணியை கைவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பதற்கு அவசியமான ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்கள் பெறவில்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM