பாடசாலை மாணவியொருவருக்கு உயர்தர மாணவியினால் ஊசியின் மூலம் பலவந்தமாக மருந்தொன்றை செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் பொலநறுவையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பொலநறுவையிலுள்ள குறித்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவிக்கு அதே பாடசாலையில் கல்வி பயின்றுவரும் உயர்தர மாணவியொருவர் ஊசியின் மூலம் மருந்தொன்றை செலுத்தியுள்ளார்.
அம்மாணவி பாடசாலையின் கழிப்பறைக்கு சென்று திரும்பி வரும் போதே குறித்த மாணவியினால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டு ஊசியின் மூலம் மருந்தொன்று செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM