சிவனொளிபாதமலை யாத்திரிகர் ஒருவர் மரணம்!

02 Mar, 2020 | 10:48 AM
image

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய (01) தினம் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட குறித்த நபருக்கு சிகப்பு அம்பல பகுதியை அண்மிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நல்லதண்ணி பொலிஸார் அவரை அவசர அம்பியுலன்ஸ் சேவையில் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கையெடுத்தனர். 

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். 

இவ்வாறு மரணமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நாகந்த கெகரகே குணசேகர  என பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58