இலங்கை அணி வீரர்களின் நேர்த்தியான துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3 ஆவது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 307 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரின் சீரானா துடுப்பாட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 307 ஓட்டங்களை குவித்தது.
அவிஷ்க பெர்னாண்டோ 29 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களையும், குசல் பெரேரா 44 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 55 ஓட்டங்களையும்,மெத்தியூஸ் 12 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், திசர பெரேரா 38 ஓட்டங்களையும், ஹசரங்க 16 ஓட்டங்களையும் சந்தகன் டக்கவுட்டுடனும், இசுறு உதான 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, நுவான் பிரதீப் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும், ரோஸ்டன் சேஸ், கிரான் பெல்லார்ட், மற்றும் ஷெல்டன் கோர்ட்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Photo Credit : ICC
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM