துருக்கிய ஜனாதிபதி ஐரோப்பிய எல்லையை திறக்க முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து 76,000 க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி - ஐரோப்பிய ஒன்றிய எல்லையை தாண்டியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு இன்று தெரிவித்தார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. எனினும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.
இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை ரஷ்ய- சிரிய படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 33 துருக்கி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு துருக்கி நடத்திய பதிலடி தாக்குதலில் சிரிய இராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
இதனால் சிரியாவின் ஆதரவு நாடான ரஷ்யாவுக்கும்-துருக்கிக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றத்தால் சிரியாவின் இட்லிப் பகுதியில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே அகதிகளாக துருக்கி நாட்டிற்குள் நுழைய தொடங்கியுள்ளனர்.
துருக்கியில் ஏற்கனவே சுமார் 35 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். தற்போது நிலவிவரும் போர் பதற்றத்தால் சிரியாவில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக ரஷ்யா வான்வெளி தாக்குதலில் தங்கள் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அவசரமாக ஆலோசனை நடத்த துருக்கி நேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து நடைபெற்ற நேட்டோ ஆலோசனை கூட்டத்தில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு இரங்கல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
இதனால் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட எந்தவித ஆர்வமும் காட்டாத நேட்டோவின் செயல் துருக்கிக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந் நிலையில், நேட்டோவின் செயலால் ஆத்திரமடைந்த துருக்கி தங்கள் நாட்டில் அகதிகளாக உள்ள மக்களை ஐரோப்பிய நாட்டிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்காக துருக்கியையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இடமாக உள்ள துருக்கி-கிரீஸ் எல்லையை திறந்து வைத்துள்ளது. இதனால் சிரிய அகதிகள் மட்டுமல்லாமல் துருக்கியை சேர்ந்த ஆயிரக்காணக்கானவர்களும் கிரீஸ் எல்லை நோக்கி பயணம் செய்துவருகின்றனர்.
இதனால் ஐரோப்பாவுக்கு நுழையும் நோக்கில் எல்லையை முற்றுகையிட்டுள்ள அகதிகளை கிரீஸ் அதிகாரிகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.
அகதிகளுக்கும் கிரீஸ் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது பல அகதிகள் அத்துமீறி வேலிகளை தாண்டி சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லைக்குள் நுழைந்தனர்.
இந் நிலையில், துருக்கி ஜனாதிபதி எர்டோகன், சிரிய அகதிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது எல்லையை தனது நாடு திறந்துவிட்டதாக நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.
இந் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பையடுத்து 76,000 க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி - ஐரோப்பிய ஒன்றிய எல்லையை தாண்டியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
துருக்கியுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான 2016 ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிக்கு ஈடாக ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வதை மட்டுப்படுத்துவதாக துருக்கி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM