கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட  இருவர் கைது!

01 Mar, 2020 | 12:06 PM
image

திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்-முள்ளிப்பொத்தானை, யூனிட்  07 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜமால்தீன் றினாஸ் மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த அப்துல் ஹஸன் சில்மியா (29 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து,  கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும் போது  குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவும், 45,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இவர்களின் முன் குற்றங்கள் தொடர்பிலும்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51