திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்-முள்ளிப்பொத்தானை, யூனிட் 07 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜமால்தீன் றினாஸ் மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த அப்துல் ஹஸன் சில்மியா (29 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும் போது குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவும், 45,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இவர்களின் முன் குற்றங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM