சிறுமி துஷ்பிரயோக காணொளி குறித்து விசாரணை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

Published By: Digital Desk 3

01 Mar, 2020 | 01:07 PM
image

(செ.தேன்­மொழி)

சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தும் வகையில் சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளூ­டாக வெளி­வந்த காணொளி தொடர்பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவின் பணிப்­பாளர் சாலிய சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தற்­போது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த காணொளி விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்பில் அவ­ரிடம் வின­விய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இதன்­போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,

சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தும் காணொ­ளியின் இறு­வட்டு எமக்கு கிடைத்­ததை அடுத்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­க­மைய பொலிஸார் , பொலிஸ் குற்­றப்­பி­ரி­வினர் , பொலிஸ் பிரிவின் தொழில்­நுட்பம் மற்றும் இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர் ஆகியோர்  பரி­சீ­ல­னை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­நி­லையில் தொடர்ந்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எமது விசா­ர­ணைக்கு சிறுவர் பாது­காப்பு பிரி­வி­னரும் பெரும் ஒத்­து­ழைப்­பு­களை பெற்றுக் கொடுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் சந்­தேக நபரை அடை­யாளம் காணு­வ­தற்­கான அனைத்து விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன்,  விரைவில் அவரை அடை­யாளம் காண­மு­டியும் என்று எதிர்­பார்க்­கின்றோம். இந்­நி­லையில் சம்பவம் தொடர்பான தீவிர பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதினால் குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31