கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளினால் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுப்பாடானது பாரியளவு குறைந்துள்ளதாக நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் சுட்க்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பணிகளை இடை நிறுத்தின.
அது மாத்திரமல்லாமல் பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்மையினால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாரியளவு மட்டுப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் ஜனவரி 1- 20 ஆம் திகதிகள் வரை எடுத்த சீனாவின் செய்மதிப் படத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு உயர்வாக காணப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 10-25 ஆம் திகதி வரை எடுக்கப்பட்ட செய்மதி படத்தில் சுற்றுச்சூழல் மாசுப்பாடு பாரியளவில் குறைவடைந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தின் காற்றின் தர ஆராய்ச்சியாளரான ஃபீ லியு கூறுகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்காக இவ்வளவு பரந்த பகுதியில் இதுபோன்ற வியத்தகு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவினை நான் கண்டது இதுவே முதல் முறை ஆகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM