பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுதிரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், குழு 'A' யில் இந்திய அணியுடன் கலமிறங்கிய இலங்கை மகளிர் அணியை, 33 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணியின் கெப்டன் சாமரி 33 ஓட்டங்களை குவித்தார். தில்ஹரி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றார். இதே வேளை இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து 114 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், 116 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராதா யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பெண்கள் டி 20 உலகக் கிண்ண போட்டிகளில் குழு 'A' யில் முதலிடம் வகிக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனையடுத்து இலங்கை மகளிர் அணி டி 20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. டி 20 போட்டிகளில் இலங்கை பெண்கள் அணிக்கு தொடர்ச்சியாக இது 13 வது தோல்வியாகும், இலங்கை கடைசியாக 2018 ஆம் ஆண்டில் டி 20 போட்டியில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM