நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இனிங்சிலும் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி சொற்ப ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களிற்கு ஏமாற்றமளித்துள்ள அதேவேளை அவர் டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய விதமும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கிறைஸ்சேர்சில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிங்சில் 242 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணியின் தலைவர் விராட்கோலியிடமிருந்து சிறப்பான இனிங்ஸ் ஒன்றை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மீண்டும் சொற்ப ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்துள்ளார். விராட்கோலி 3 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் டிம் சௌத்தியின் பந்திற்கு ஆட்டமிழந்தார்.
இதேவேளை இந்திய அணியிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு ரிவியுவை விராட்கோலி பயன்படுத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
விராட்கோலி2016 ற்கு பின்னர் இதுவரை 14 தடவைகள் நடுவரின் தீர்ப்பை மறு ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்,இதில் 2017 -18 இல் இலங்கைக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் அவரது ரிவியு மாத்திரம் சரியானதாக அமைந்துள்ளது என ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ளார்
விராட்கோலி குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றமை இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது,எனமற்றுமொரு ரசிகர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்
கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு ஆனால் விராட்கோலி மீண்டுமொரு முறை அணியை விட தனக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார் என மற்றுமொரு ரசிகர் பதிவு செய்துள்ளார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு எதிராக எல்பிடபில்யூ வழங்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் விராட்கோலி தான் ஆட்டமிழக்கவில்லை என கருதுகின்றார் என்ற கருத்தை பதிவு செய்துள்ள ரசிகர் ஒருவர் நீங்கள் அணித்தலைவர் என்பதற்காக டிஆர்எஸ்சினை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விராட்கோலி தலைமைப்பதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றார் சுயநலத்துடன் செயற்படுகின்றார் எனவும் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM