(இராஜதுரை ஹஷான்)
அரச வருமானத்தை ஈட்டிக்கொள்ளாமல் அரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் கிடையாது. மக்களுக்காக முன்னெடுக்கும் சேவையில் ஊழியர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் வினைத்திறனான செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
1972ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் அரச நிதி கணக்காய்வு குழுவிற்கு பொறுப்பாக்கப்பட்டிருந்தது. 1978ஆம் ஆண்டுக்கு பிறகு நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளன. சட்டத்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் பிரதான நோக்கம் மக்களுக்கான சேவை வழங்குதலிலேயே தங்கியுள்ளது. அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இருக்கும் வளங்களை பயனுடையதாகக் கொண்டு செயற்பட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். அரச சேவையினை மக்கள் பெற்றுக் கொள்ளும்போது பல சந்தர்ப்பங்களில் அதிருப்தியடைகின்றார்கள். இதற்கு பிரதான காரணம் சேவையினை பெற்றுக்கொள்வதில் ஏற்படும்.
வினைத்திறனாகவும் விரைவாகவும் சேவைகளை முன்னெடுக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். குறுகிய காலத்தில் அரச சேவையினை முழுமையாக நவீன முறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கையினை வகுத்து அவற்றை முன்னெடுத்து செல்வதற்கு நேரம் ஒதுக்குவதை காட்டிலும், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இடம்பெறும் போராட்டங்களுக்கு தீர்வு காண்பதற்கு அதிக நேரம் செலவிடப்படுகின்றது. ஆகவே போராட்டங்களை மேற்கொள்பவர்களுடன் தொடர்புடைய அமைச்சுக்களினூடாக தீர்வை வழங்குமாறு குறிப்பிட்டுள்ளேன்.
அரச ஊழியர்கள் பலதரப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்கள். அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ளாமல் எவ்வாறு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அரச அதிகாரிகள் முதலில் மக்களுக்கு பயனுடையதான சேவையாற்ற வேண்டும். அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட பல தாபனங்கள் சுயாதீனமாக செயற்படும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயாதீனமான நிறுவனங்களில் தனிப்பட்ட உரிமை என்பதை குறிப்பிட்டுக் கொண்டு ஒருவர் நிறுவன சுயாதீனங்களுக்கு முரணாக செயற்பட முடியாது.
மக்களுக்கான சிறந்த சேவையினை அரச ஊழியர்கள் முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM