கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

29 Feb, 2020 | 11:16 AM
image

கிளிநொச்சி வேரவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிப்பர் வாகனம் ஒன்றில் 117 பொதி கேரளா கஞ்சாவுடன் பயணித்து கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 323 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. 

பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை 47 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்