இவ்வார அமைச்சரவை தீர்மானங்கள் - பகுதி 2

Published By: Vishnu

28 Feb, 2020 | 03:18 PM
image

முதல் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்

15. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்காக சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்தும் கால எல்லையை நீடித்தல்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களினால் செலுத்த வேண்டிய சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகை எதிர்பார்த்த வகையில் அதிகரிக்கவில்லை என்பதினால் சம்பந்தப்பட்ட நிவாரண காலத்தை மேலும் நீடிப்பது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்காக நிவாரண கால எல்லை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் மேலும் 4 மாத காலம் நீடிப்பதற்கும் இந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட செலுத்தப்படாத சுற்றுலா அபிவிருத்தி வரியை 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் ஆம் திகிதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுவான 20 தவணைகளில் அறவிடுவதற்கும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16.மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், கொழும்பு, ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்கான வேலைத்திட்டம்.

மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் சர்வதேச நிரந்தர நேர அட்டவணைக்கு உட்பட்ட விமான சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் பிராந்திய செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்.

  • 60 அமரிக்க டொலர்களான விமான நிலைய சில விதிவிலக்கு வரி (னுநஎயைவழைளெ) விமான நிலையத்துக்குள் அறவிடுவதை 2 வருட காலத்துக்கு முழுமையாக இடை நிறுத்துதல்.
  •  இந்த விமான நிலையங்களில் வெளியேறும் உபசரிப்பு பணியாளர்களுக்கான கட்டணத்துக்கு கழிவை வழங்குதல்.
  • இந்த விமான நிலையங்களில் நில செயற்பாட்டு கட்டணத்துக்காக கழிவு வீதத்தை வழங்குதல்.
  • நிவாரண விலைக்கு விமானத்திற்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
  • முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு துணைப்பட்டியல் இடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் தரை இறங்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தை கைவிடுதல்.

கொழும்பு, ரத்மலானை சர்வதேச விமான நிலையம்

  • ஒரு கால வரையறைக்காக 60 அமெரிக்க டொலர் விமான நிலைய விதிவிலக்கு விரியில் 50 சதவீத்தை அறிவிடுதல்.
  • நிவாரண விலைக்கு விமானங்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
  • முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு தணை பட்டியலிடப்பட்ட விமான நிறுவனத்துக்கு தரை இறங்குதல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தல் கட்டணத்தை கைவிடுதல்.

17. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற மேம்படுத்தும் துறைசார்ந்த திட்டத்தின் கீழ் கிராந்துருக் கோட்டை நீர் சுத்திகரிப்பை மேம்படுத்துதல், இயந்திர மற்றும் மின் வேலி தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற துறைசார்ந்த திட்டத்தின் கீழ் 46.78 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் நீர் வழங்கல் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் கிராந்துருக் கோட்டை நீர் சுத்திரகரிப்பை மேம்படுத்துதல், இயந்திரம் மற்றும் மின் வேலி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் சிபாரிசிற்கு அமைய 330.10 மில்லியன் ரூபாவுக்கு கஹத்துட்டுவ பொல்கஸ்ஒவிட்ட வாசிறி – சாவின்ந்த குழும வியாபாரத்துக்கு வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18.கழிவு பொருட்களை எடுத்து செல்வதற்காக வசதிகளைக் கொண்ட பல்லின சைக்கிள்களை வழங்குதல்.

மக்கள் தொகையை அதிகரித்தல் மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் நடைமுறையின் காரணமாக பயன்படுத்தப்படும் சுற்றாடலில் எரியப்படும் கழிவு பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது. கழிவு பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் அல்லது ட்ரக்டர் வாகனங்களில் இலகுவாக நெருங்க முடியாததுடன் குறுக்கு பாதையில் கழிவு பொருட்களை ஒன்று சேர்ப்பதற்காக லேன்மாஸ்டர் போன்ற கை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய புத்தாக்க தயாரிப்பாளரான வரையறுக்கப்பட்ட நேசன் ஐ தனியார் நிறுவனத்தினால் இவ்வாறான குறுக்கு பாதைகளில் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய சுற்றாடல் பாதிப்பை குறைக்கும். 250 – 300 கிலோ கிராம் வரையில் எடுத்துச்செல்லக்கூடிய 'குறும்பெட்டியா' என்ற சைக்கிளை தயாரித்துள்ளது. இந்த 10 சைக்கிளை கொள்வனவு செய்யும் உத்தேச திட்டமாக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கி அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு இவ்வாறான சைக்கிள்களை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இவ்வாறான 10 சைக்கிள்களை ஒரு சைக்கிள் 180,000 ரூபா என்ற அடிப்படையில் 1.8 மில்லின் ரூபாவிற்கு கொள்வனவு செய்த மத வழிபாட்டு தலங்கள் மற்றும் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.

ஐந்து வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்ட முறையை சுபீட்சமான மாணவர் சமூகம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்யும் நோக்கில் தொடர்ந்தும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. குறிஞ்சா தீவு (ஆனையிறவு) – வடக்கு உப்பளத்தை அரச – தனியார் பங்குடைமையுடன் மீண்டும் ஆரம்பித்தல்.

கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த மோதலினால் நிறுத்தப்பட்ட குறிஞ்சா தீவு (ஆனையிறவு) உப்பள தயாரிப்பு மற்றும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதற்கான பணிகள் இதுவரையில் வெற்றியடையவில்லை. இந்த உப்பளத்தை முன்னெடுக்கும் பணிகள் மாந்தை சோல்ட் லிமிட்டட் நிறுவனம் மற்றும் முறையான நடைமுறைகளை கடைப்பிடித்து தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் அரச – தனியார் பங்குடைமை திட்டமொன்றாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. கண்டி மற்றும் பேராதனைக்கு இடையிலான ரயில் பாதையை இரண்டு நிரல் பாதையாக மேம்படுத்துதல்.

தற்பொழுது உள்ள கண்டி – பேராதெனிய ரயில் பாதைக்கு அருகாமையில் அமைக்கப்படும் இரட்டை ரயில் பாதை 6.0 கிலோ மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதுடன், தற்பொழுது கண்டியில் இருந்து கெட்டம்பே ரயில் குறுக்கு பாதை வரையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. போக்குவரத்து காலத்தை மேலும் குறைக்கும் நோக்கில் கெட்டம்பே ரயில் குறுக்கு பாதை மற்றும் பல்கலைக்கழக பூங்காவுக்கு இடையில் தற்பொழுது உள்ள ரயில் பாதைக்கு அமைவாக மேம்படுத்தப்பட்ட சமிஞ்ஞை கட்டமைப்புடனான மேலதிக பாதை ஒன்றை ஒன்றிணைக்கப்பட்ட நிதி மானியத்தைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கும் 00 தம்வெல் 37 மைல் கல் என்ற இடத்தில் மகாவலி நதி ஊடாக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காகவும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. 2020.04.01 தொடக்கம் 2020.11.30 வரையிலான 8 மாத காலத்திற்குள் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.05) 1,137,500 பீப்பாய்கள் மற்றும் டீசல் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.001) 262,500 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தத்தை எட்டுதல்.

2020.04.01 தொடக்கம் 2020.11.30 வரையிலான 8 மாத காலத்திற்குள் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.05) 1,137,500 பீப்பாய்கள் மற்றும் டீசல் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.001) 262,500 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமையM/s Petrochina International Pte. Ltd., Singapore என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23.பெரிய வெங்காயத்திற்காக அரசாங்கம் ஆக கூடிய உறுதி செய்யப்பட்ட விலையை முன்னெடுத்ததன் மூலம் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல்.

'நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு' கொள்கை பிரகடனத்தின் மூலம் பெரிய வெங்காயம் போன்ற பயிர் உற்பத்திக்கான புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதனை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் ஆக கூடிய வெளிநாட்டு நாணய பயிர் உற்பத்தியை மேற்கொண்டு விவசாயிகளின் வருமானமாக முன்னெடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தமது அறுவடைக்கான நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்து உற்பத்தித் துறையில் அவர்களை ஊக்குவிப்பதற்காக பெரிய வெங்காயத்தின் நிர்ணய விலையை மேற்கொள்வதற்கும் இந்த உற்பத்திக்கான காணியின் ஆக கூடிய பலனைக் கொண்டதாக பயன்படுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்காக தற்பபொழுது வழங்கப்படும் 60.00 ரூபாவான ஆக கூடிய நிர்ணய விலையை 80.00 ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் பெரிய வெங்காய உற்பத்தி அறுவடையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகாவலி விவசாயம், நீரப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலம் விசேட வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) பொருத்தமான அபிவிருத்தி உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கழிவின் இடைக்கால அறிக்கை.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன திட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை வழங்குவதற்காக பேராசிரியர் லலித்த ஸ்ரீ குணருவான் அவர்களின் தலைமையில் மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் அவர்களிடம் இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மூலதன வள பற்றாக்குறை மற்றும் கடன் சுமையினால் இலங்கையின் அடிப்படைப் பொருளாதார பாதுகாப்பற்ற முதலீட்டுக்கு தேவையான நிதி வளம் நாட்டின் வெளிநாட்டு கடன் சுமையை அதிகரிக்காமல் விநியோகிக்கக்கூடிய MCC ஆலோசனைக்குள் உள்ளடங்கியிருந்த போதிலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தேச சில திட்டங்களுக்குள் இலங்கை தேசிய, சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு தவறான அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சில பிரிவுகள் இடம்பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே போன்று உத்தேச உடன்படிக்கை மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தைப் போன்று நிலை நிறுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் ஆக்க யாப்பு திருத்த சட்டத்தில் இலங்கை அரசாங்கம் யாப்புக்கும் நாட்டின் சட்ட விதிகளுக்கும் அமைவாக அல்லாத வகையில் இடம்பெறக்கூடிய சரத்து மற்றும் மானியத்தைப் போன்று தேசிய நிதியத்துக்கும் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாதகமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏனைய நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறான பாதகமான அம்சங்களுக்கு பொருத்தமான தவறுகளைத் திருத்துதல் மற்றும் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமாவதுடன் இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் திட்ட ஆலோசனை குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியம் மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பதும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உள்ளடக்கிய குழுவின் இடைக்கால அறிக்கையை அமைச்சரவை அறிந்து கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

25. உள்ளுர் இறைவரி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பின் RAMIS 2.0 –B  பிரிவின் மென் பொருளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.

வரி நிர்வாக செயற்பாட்டின் அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதற்கு 2016 ஆம் ஆண்டு தொடக்கம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் RAMIS வேலைத்திட்டம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் மூலம் அரச வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் இணையத்தள சேவை ஊடாக தொடர்புபடுதல் மற்றும் இடைமுகத்தை ( Interface ) வழங்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றது. புதிய தேசிய வருமான சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும் தேவையை கவனத்தில் கொண்டு RAMIS 2.0  - B  ஆக மேம்படுத்தப்பட்ட RAMIS 2.0 மென்பொருளில் நிர்மாணப்பகுதியை மாற்றுவதற்கான ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கு அமைய 15,534,364 டொலர்கள் சிங்கப்பூர் நாணயத்தை Singapore cooperation enterprise (SCE) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. புதிய கொரோனா வைரஸ் (Covid – 19) என்ற திட்டத்திற்குள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய வலயத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலன்களை பாதுகாப்பதற்காக இலங்கை குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.

தற்பொழுது 2700 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 80,000 ற்கு மேற்பட்டோரை நோய் தொற்றுக்குள்ளாக்கிய புதிய கொரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன், இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுக்குழுவினரினால் இவர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தவறாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பான கண்காணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள்; சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

27. ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்.

நீண்டகாலம் நிலவிவரும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்றை வகுப்பது அத்தியாவசியம் என்பது சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செயற்படும் பொருட்டு தற்பொழுது அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், தற்பொழுது ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்ககூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமைவாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் மூலம் ஆசிரியர் - அதிபர் சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58