(தி.சோபிதன்)
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இதுவரை நடக்காத சர்வதேச விசாரணையை நடந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொய் சொல்லி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
த.தே.ம முன்னணியின் ஊரோடு உறவாடுவோம் கலைப் பிரிவினரின் விளையாட்டு நிகழ்வில் பங்கெடுத்த வீராங்கனைகள் கௌரவிப்பு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
மகளிர் அணித் தலைவி வாசுகி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான சான்றிதழ் களையும் பதக்கங்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.
இந் நிகழ்வின் பின் ஐ.நா. தீர்மானத்தில் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியது தொடர்பில் ஊடகங்களுக்கு கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவுக்கான பயணத் தடையை ஐ.நா.வின் விசாரணைகளுக்கு அமைய எடுக்கப் பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறது. ஆனால் அதுவல்ல உண்மை. சீனா சார்பில் இருந்து விலகாமல் ஐரோப்பிய நாடுகளின் வட்டத்துக்குள் வராது விட்டால், சவேந்திர சில்வாவுக்கு மட்டுமல்ல ராஜபக் ஷக்கும் இது தான் நிலை என்பதை இந்தத் தடையினூடாக அமெரிக்கா சொல்லியுள்ளது.
சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். இலங்கையில் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற வேண்டியது குறித்து அறிக்கை ஒன்றை மாத்திரம் ஐ.நா. வெளியிட்டது. அதனை சர்வதேச விசாரணை இடம்பெற்றுவிட்டதாக ஒரு தரப்பு பொய் களைக் கூறி வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM