2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்
சன்ரைசர்ஸ்; அணியின் தலைமை பொறுப்பிலிருந்து நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு டேவிட் வோர்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஹைதராபாத் அணியின் தலைவராக வில்லியம்சனே நீடித்திருக்கவேண்டும் என பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கேன் வில்லியம்சன் என்ன தவறு செய்தார் என யாராவது தெரிவிக்க முடியுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது கேலிக்குரிய விடயம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
தலைமைப்பதவிக்கு கேனே வோர்னரை விட பொருத்தமானவர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு ரசிகர் சன்ரைசர்ஸ் அணி தலைமைப்பதவி தொடர்பில் பெரும் தவறிழைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நான் வோர்னரை மதிக்கின்றேன் ஆனால் அவரை அணித்தலைவராக ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் அணியின் ரசிகர் என்ற அடிப்படையில் எனக்கு வில்லியம்சனின் பெறுமதி தெரியும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ள ரசிகர் ஒருவர் அவர் எப்போதும் பொறுமையிழக்காதவர் அவர் எப்போதும் சிரிப்பவர் எனவும் தெரிவித்துள்ளார்.
வோர்னர் எப்போதும் எங்களிற்கு ஒரு அவமானம் எனவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் பதவி கிடைத்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள டேவிட்வோர்னர் இந்த வருடம் தனது அணிக்கு கிண்ணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM