கொரோனா தொற்றுக்கள்ளாகி நேற்றைய தினம் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 44 ஆக பதிவாகியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதில் 41 உயிரிழப்புகள் கெரோனாவின் மையமான ஹூபே மாகாணத்திலும் மூன்று உயிரிழப்புகள் ஹூபே க்கு வெளியிலும் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் வியாழக்கிழமை வரை மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,788 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோர்:
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 318 பேர் ஹூபே மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒன்பது பேர் ஹூபேக்கு வெளியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி தற்போது சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 78,824 ஆக அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் 83,045 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவளை மொத்தமாக 36,117 நோயளார்கள் வைத்தியசாலைகளிலிருந்து பூரண குணமடைந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.
கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்:
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளுக்கு வெளியே இதுவரை 70 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,858 ஆக உயர்வடைந்தும் உள்ளது.
- ஈரான்: 26
- இத்தாலி: 17
- தென்கொரியா: 13
- ஜப்பான்: 08
- ஹொங்கொங்: 02
- பிரான்ஸ்: 02
- பிலிப்பைன்ஸ்: 01
- தாய்வான்: 01
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM