இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தற்போது கோப் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இதன்பிரகாரம் விசாரணைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். மேலும் அர்ஜூன மகேந்திரனின் பதவியை நீடிப்பதா ? இல்லையா ? என்பதனை தீர்மானிப்பதில் கோப் குழுவின் அறிக்கையும் ஆதிக்கம் செலுத்தும் என்று கோப் குழுவின் அங்கத்தவரும் தொழிற்பயிற்சி துறை இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார் .
பிட்டகோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பதவி நீக்க வேண்டும் என சிவில் அமைப்பினர் மற்றும் பொது எதிரணியினர் கோரிவருகின்றனர். அத்துடன் அரசாங்கத்திற்குள்ளேயும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் ஜூன் 30 ஆம் திகதி அவரது பதவிக்காலம் முடிவடைகின்றது. . இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா ? என்பதனை நாம் ஆராய வேண்டும். பலர் பலவிதமான கருத்துக்களை கூறுவார்கள் . அரசாங்கத்திலுள்ள சிலர் கூட பலவிதமான கருத்துக்களை கொண்டுள்ளனர் . அதற்காக குறித்த அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என கூறவே முடியாது .
தீவிர விசாரணைகளின் முடிவு இல்லாமல் அரசாங்கத்தின் நிலைபாட்டை கூற முடியாது.. மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை பதவியில் தக்கவைத்து கொள்வதற்காக பிணைமுறி மோசடிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிமறைப்பதாக கூறுகின்றனர் .அது முற்றிலும் தவறாகும் . அவர் மோசடி இழைத்ததாக இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை . எனினும் இது தொடர்பில் தீவிர விசாரணை செய்யாமல் கூறமுடியாது . இது தொடர்பில் கோப் குழுவிலும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது . இதன்படி கோப் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. குறித்த விசாரணையின் போது நிதி அமைச்சின் கீழ் இயங்கும் திறைசேரியினது அறிக்கையும் கோரப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது . இதன்பின்னர் கோப் குழுவினது அறிக்கை கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் . ஆகவே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிப்பதா ? இல்லையா ? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது கோப் குழுவினது அறிக்கையும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் .
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விசாரணையின் போது கடந்த காலங்களில் பிணைமுறி வழங்கப்பட்ட முறைமையையும் ஆராய வேண்டியுள்ளது . கடந்த காலங்களில் 12.99 என்ற வட்டி வீதத்தில் அடிப்படையில் விடுக்கப்பட்ட முறியை தற்போதைய ஆளுநர் 12.77 என்ற வீதத்தின் அடிப்படையில் வழங்கியுள்ளார் .இதன்பிரகாரம் மிகவும் குறைந்த வட்டியின் அடிப்படையிலேயே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது . ஆகையால் கடந்த ஆட்சியின் போது பிணைமுறி வழங்கப்பட்ட விதம் முற்றிலும் முரணானது. எனினும் அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. . ஆகவே இதனை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் .
அத்துடன் நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவு ஒருபோதும் கலைக்கப்படமாட்டாது . குறித்த பிரிவை கலைப்பதற்கு பொது எதிரணியினரே பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் . அதன்போதே அவர்களின் ஊழல் மோசடிகள் மூடி மறைக்கப்படும் . ஆகையால் நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினை கலைப்பதற்கான தேவை பொது எதிரணியினருக்கே உள்ளது. அதற்கு மாறாக அரசாங்கத்திற்கு எந்தவொரு நோக்கமும் கிடையாது.
ஆகவே நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவை ஒருபோதும் கலைக்காது. . அதற்கு மாறாக அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு சுயாதீன நிறுவனமாக மாற்றப்படும். எவ்வாறாயினும் குறித்த
பிரிவின் ஊடாக இதுவரை பரிசீலிக்கப்
பட்ட விசாரணைகள் மூடி மறைக்கப்பட மாட்டாது. பல வருடங்கள் ஆனாலும்
நிலைத்து நிற்கக் கூடியதாக நிதி மோசடி குற்றப்புலனாய்வுப் பிரிவு மாற்றிய மைக்கப்படும் என்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM