(எம்.ஆர்.எம்.வஸீம்)
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிப்பதற்கு முன்னர் என்னை கொலைசெய்வதற்கு ஆலோசனை வழங்கியமை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு விரைவில் அழைப்பு விடுக்கும் என இராஜாங்க அமைச்சரும் அரசாங்க ஊடக பேச்சாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரினால், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இதுவரை வாக்குமூலம் ஒன்றைக்கூட பெறாமல் இருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேளிவிக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஆனால் குற்றப்புலனாய் பிரிவு ரணில் விக்ரமசிங்கவிடம் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதறகு முன்னர் என்னை கொலைசெய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவுக்கு ஆலாேசனை வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்.
என்னை கொலைசெய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவுக்கு ஆலாேசனை வழங்கி குரல் பதிவு கடந்த மாதங்களில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த குரல் பதிவு ரன்ஜன் ராமநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்வுடையதா என உறுதிப்படுத்துவதற்காக ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பகுப்பாய்வு அறிக்கை நேற்று (நேற்றுமுன்தினம்) கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அதனடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அடுத்தவாரமளவில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM