ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்திருக்கின்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
இதன்போது இலங்கை 30/1 அனுசரணையிலிருந்து விலகுவதாக உத்தியோகப்பூர்வமாக மனித உரிமை ஆணையாளரிடம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிக்கவிருக்கிறார்.
அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமானது ஏன் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுகின்றது என்பது தொடர்பாகவும் அடுத்ததாக உள்ளக ரீதியில் இந்தப் பிரச்சினையை இலங்கை எவ்வாறு ஆராயும் என்பது குறித்தும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்டிடம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா வந்திருக்கின்ற அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்றைய தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றியிருந்தார். அத்துடன் இன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை குறித்த விசேட விவாதத்திலும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM