முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கென ஈடுபடுத்தப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கை
யொன்றை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என 500 இராணுவத்தினரும்
130பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளாகவும் எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தலைமையகம் வழங்கியமைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என படைவீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து எந்தவித ஆவணங்களும் இராணுவத்தினரிடமும் காணப்படவில்லை என இராணுதலைமையக வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பின் அளவிற்கே மகிந்த ராஜபக்ஷவிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் பின்னரே ஏனைய தேவைகள் குறித்து ஆராயவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM