அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமன்னாரிலிருந்து தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயதான எடிஹ என்ற பெண்ணே தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கிலோ மீற்றர் நீளமுள்ள பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்துள்ளார்.
குறித்த பெண் பாக் ஜலசந்தியை நீந்திக் கடப்பதற்காக கடந்த மாதம் இந்தியாவின் டில்லியில் உள்ள வெளிவிவகார பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையின் தலை மன்னாரிலிருந்து நேற்று புதன் கிழமை காலை 05 மணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ நீந்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் நண்பகல் 12.05 மணியளவில் எடிஹ மற்றும் ஆடம் ஆகியோர் இலங்கை-இந்தியச் சர்வதேச எல்லைக்கு வந்தடைந்தார்கள். பிற்பகல் 03.15 மணியளவில் தனுஸ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே இருவரும் வந்தனர்.
இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச கடல் எல்லை வரையிலும், இந்தியக் கடற்பகுதியில் கடலோர பாதுகாப்புப் படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM