"மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் ஐ.தே.கவிற்கு தற்போது  இல்லை" 

Published By: R. Kalaichelvan

26 Feb, 2020 | 07:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியிடம் தற்போது கிடையாது. அதிகாரம் மற்றும் பதவிக்காகவே முரண்பட்டுக் கொள்கின்றார்கள். ஒரு சிலரது சுய நோக்கங்களினால் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் இன்று அரசியல் ரீதியில் தனித்து விடப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அசோக பியந்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தோற்றம் பெற்றன. நாட்டின் அரசியல்  வரலாற்றில்  சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரண்டு கட்சிகள் மாத்திரமே 2018ம் ஆண்டு வரையில் அரசியலில் செலுத்தி வந்தன. ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின்  செயற்பாடுகள் தவறான  பாதையில் சென்றமையினால் கட்சியின் கொள்கை  பலவீனமடைந்தது.

மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியிடம் தற்போது கிடையாது. அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.

இதனாலேயேமக்கள் ஐக்கிய தேசிய கட்சியை வெறுத்தார்கள்.  பல விடயங்களை ஆராய்ந்தே அக்கட்சியில் இருந்து விலகி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்டேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சிலரது சுயநல தேவைகளினால்   கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அதாவது தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள் அரசியல் ரீதியில் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்கள் பொதுத்தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59