(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைக் குறை கூறி அவர்களுடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் அவரது கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, சுதந்திர கட்சி தற்போது ஒழுக்கமான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே நாம் ஐ.தே.கவுடன் சென்று இணைய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்தது நாம் இழைத்த வரலாற்று தவறாகும். சுதந்திர கட்சியிலிருந்த ஒருசிலர் ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டனர் என்பதற்காக முழு கட்சியுடன் அவர்களுடன் இணையாது என்றும் தயாசிறி மேலும் தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையைப் பெறும் என்று கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு குறைந்தது 75 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். எனவே அவர்களுடன் சுதந்திர கட்சியை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது வேடிக்கையான விடயமாகும். நாம் ஒரு போதும் அவ்வாறு இணையப் போவதுமில்லை என்பதை சஜித் பிரேமதாசவிடம் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரவுப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன் போன்றோர் இதற்கு முன்னரும் பலமிக்க ஒரு அணியாக இருக்கவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு இருக்கப் போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தால் மாத்திரமே அவர்களால் வெற்றி பெற முடியும். எனவே அவர்கள் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் , கூட்டணியமைத்து போட்டியிட்டாலும் எமக்கு சவாலாக இருக்க மாட்டார்கள்.
சு.க - பொதுஜன பெரமுன கூட்டணி
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் முதலாவது மத்திய குழு கூட்டம் முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன புதிய கூட்டணியின் பிரதி தலைவராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டார். அத்தோடு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் உப தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை திலங்க சுமதிபாலவினால் முன்வைக்கப்பட்டது.
இதில் 5 தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் எம்முடன் கைகோர்த்துள்ளன. இந்த கூட்டணிக்குள் எந்த சந்தர்ப்பத்திலும் பிளவுகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM