மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு அதிபர் ஆசிரியர் கள் பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்
யாழ் வீமன்காமம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று மகா வித்தியாலய அதிபர் சோ.இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் வித்தியாலயத்தின் பழையமாணவருமான மாவை சோ சேனாதிராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ரும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்ருகையில்,
இன விடுதலைக்காக போராடியதால் பலதடவை கைது செய்யப்பட்டு சிறை சென்றவன் இன்றும் அதன் வலி இருக்கிறது எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்ரப்படவில்லை தொடர்ந்தும் போராட்டம்தான் முக்கியம் ஐனநாயக ரீதியாக எமது போராட்டம் தொடரும்
கடந்த ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை முன்னேடுத்தோம் இதற்காக பல அதிகாரிகளை இணைத்து செயற்பட்டோம் அதற்காக தற்போதைய ஆட்சியாளர்கள் அத்தகைய அதிகாரிகளை பழிவாங்கும் நிலையில் இடமாற்ரங்களை வழங்குகிறார்கள் இதனால் அவர்கள் தமது வேலையை இராஜினாமா செய்துள்ளார்கள்.
இந்த அதிகாரிகள் அரசியல் செய்யவில்லை மக்களுக்கான வேலையைத்தான் விரைவாக செய்தார்கள் இதனால் பழிவாங்கப்பட்டுள்ளார்கள் எத்தகைய நிலை வரினும் எமக்கான ஒற்றுமையை விட்டுக் கொடுக்க கூடாது ஒற்றுமையே எமதுபலம்
இன்றைய விளையாட்டு நிகழ்வுகளை பார்க்கும் போது எனது ஆரம்ப கால நினைவுகள் ஞாபகம் வருகிறது உங்களைப் போன்றே பல போட்டிகளில் பங்குபற்றி கேடயங்களை பெற்ருள்ளேன் எமது மக்களின் விடுதலைக்காக இந்தப்பாதையில் பயணிக்கின்றேன்
பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பத்திலும் வர்த்தகத்திலும் அறிவை வளர்க்க வேண்டும் அதில் மிளிர வேண்டும் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தொழில் முயற்சிக்காகவும் கல்விக்காகவும் உதவி செய்கிறார்கள் இத்தகைய உதவிகளை பெற்று மாணவர்கள் தமது கல்வியிலும் விளையாட்டிலும் மிளிரவேண்டும்
இன்றைய சூழலில் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இதன் மூலம்தான் சரியான வேலைவாய்ப்புக்களையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
இதுமட்டுமன்றி சர்வதேச ரீதியில் எம்மால் சாதனைகளை படைக்க முடியும் மாணவர்கள் எத்தகைய கல்வியில் ஈடுபடவேண்டும் அவர்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் உள்ளது தொடர்பில் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் வருட இறுதியில் கலந்துரையாடல் செய்து அதற்கேற்ப முடிவுகள் எடுத்து மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் இதனை அனைத்து பாடசாலைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM