கொரோனா வைரஸ் பரவலை எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது இரத்து ஆக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 161 ஆக காணப்படுகிறது. அது மாத்திரமல்லாது டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே கொரோனாவின் தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர், மே மாத இறுதிக்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைத்தல் அல்லது இடமாற்றம் செய்வதற்குப் பதிலாக, விளையாட்டுகளை முற்றிலுமாக இரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM