(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று பிற்பகல் ஜெனிவா வந்தடைந்தார்.
இலங்கையின் சார்பில் ஜெனிவா பேரவையில் இன்று உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார். ஒரு நீண்ட உரையை இன்றைய தினம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நிகழ்த்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. ஆரம்ப அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் ஆகியோர் ஆரம்ப அமர்வில் உரையாற்றினர்.
இந்த நிலையிலேயே இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் உரையாற்றவிருக்கிறார். முக்கியமாக தனது உரையின்போது அமைச்சர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசாங்கம் ஏன் ஜெனிவா பிரேரணையின் இணை அனுசரணையிலிருந்து விலகுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கவிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM